Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

லக்கம்பட்டி பேரூராட்சி அலுவலக கட்டடம் திறப்பு

Print PDF

தினமணி 21.05.2010

லக்கம்பட்டி பேரூராட்சி அலுவலக கட்டடம் திறப்பு

கோபி, மே 20: கோபி அருகே உள்ள லக்கம்பட்டி பேரூராட்சிக்கு தாட்கோ மூலம் ரூ.20 லட்சம் நிதி ஒதுக்கீட்டில் புதிய அலுவலக கட்டடம் கட்டப்பட்டுள்ளது. புதிய கட்டட திறப்பு விழா பேரூராட்சித் தலைவர் நாராயணசாமி தலைமையில் நடைபெற்றது.

பேரூராட்சி புதிய அலுவலக கட்டடத்தை முன்னாள் அமைச்சர் என்.கே.கே.பெரியசாமி திறந்து வைத்துப் பேசினார் (படம்).

அவர் பேசுகையில், கடந்த ஒராண்டில் மட்டும் லக்கம்பட்டி பேரூராட்சியில் ரூ.2 கோடியே 30 லட்சம் செலவில் வளர்ச்சி திட்டப் பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே யாரும் உருவாக்க முடியாத திட்டம் கலைஞர் காப்பீட்டுத் திட்டம் என்றார்.

பேரூராட்சி துணைத் தலைவர் துரைசாமி வரவேற்றார். நிர்வாக அதிகாரி முருகேசன் நன்றி கூறினார். முன்னாள் எம்.எல்.ஏ கோ..வெங்கிடு, கோபி ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் சரஸ்வதி குமாரசாமி, கோபி நகர திமுக செயலாளர் கோ.வெ.மணிமாறன், லக்கம்பட்டி பேரூராட்சி உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்