Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மேயர் அறிவிப்பு மாநகராட்சி பூங்காவில் விளையாட்டு கருவிகள்

Print PDF

தினகரன்       26.05.2010

மேயர் அறிவிப்பு மாநகராட்சி பூங்காவில் விளையாட்டு கருவிகள்

பெங்களூர், மே 26:அனைத்து பூங்காக்களிலும் சிறுவர்கள் விளையாட்டு கருவிகள் பொருத்தப்பட்டு பாதுகாக்கப்படுமென மாநகராட்சி மேயர் நடராஜ் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது: பெங்களூர் மாநகராட்சிக்குட்ட பல்வேறு பூங்காக்களின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மாநகராட்சி சட்டவிதிகள் பல இடங்கள் மீறப்பட்டுள்ளன. பல பூங்காக்களில் சட்டவிரோதமாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இந்த ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்பாளர்கள் மீது கிரிமினல் வழக்குகள் பதியவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

பல பூங்காக்களில் சிறுவர்கள் விளையாட்டிற்கு தேவையான உபகரணங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து நடவடிக்கை மேற்கொள்ளாத மண்டல அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து பூங்காக்களிலும் விளையாட்டு உபகரணங்கள் பொருத்தப்பட்டு பாதுகாக்கப்படும். மாற்று திறனாளிகள் விளையாடும் வகையிலும்உபகரணங்கள் பொருத்தப்படும். காலை மற்றும் மாலை நேரங்களில் பூங்காக்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்யும் வகையில் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்படும் என்றார்.