Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

உயர் கோபுர மின் விளக்கு துவக்க விழா

Print PDF
தினகரன்   31.05.2010

உயர் கோபுர மின் விளக்கு துவக்க விழா

வேலூர்: வேலூர் அடுத்த காட்பாடி கழிஞ்சூர் டவுன் பஞ்சாயத்தில் உயர் கோபுர மின் விளக்கு துவக்க விழா நடந்தது.

அமைச்சர் துரைமுருகன் தலைமை வகித்தார். மத்திய இணை அமைச்சர் ஜெகத்ரட்சகன் உயர் கோபுர மின் விளக்கை இயக்கி வைத்தார். கலெக்டர் ராஜேந்திரன், எம்.பி., அப்துல் ரகுமான், முன்னாள் எம்.பி., முகமது சகி, கழிஞ்சூர் டவுன் பஞ்சாயத்து தலைவர் சேட்டு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கட்டிடம் திறப்பு விழா: வேலூர் அடுத்த திருவலம் டவுன் பஞ்சாயத்தில் மகளிர் சுய உதவிக்குழு கட்டிடம் மற்றும் டவுன் பஞ்சாயத்து முதல் மாடிக் கட்டிடம் திறப்பு விழா நடந்தது. கலெக்டர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். அமைச்சர் துரைமுருகன் திறந்து வைத்தார். மத்திய இணை அமைச்சர் ஜெகத்ரட்சகன், முன்னாள் எம்.பி., முகமது சகி, மாவட்ட பஞ்சாயத்து தலைவர் ஷிலா ராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Last Updated on Saturday, 18 August 2012 09:10