Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ஆற்காட்டில் பாதாள சாக்கடை திட்டம் அமைச்சர் துரைமுருகன் பேச்சு

Print PDF

தினகரன் 02.06.2010

ஆற்காட்டில் பாதாள சாக்கடை திட்டம் அமைச்சர் துரைமுருகன் பேச்சு

ஆற்காடு, ஜூன் 2: ஆற்காட்டிற்கு பாதாள சாக்கடை திட்டம் கொண்டு வர முயற்சி எடுப்போம் என அமைச்சர் துரைமுருகன் கூறினார்.

ஆற்காட்டில் தமிழக அரசின் இலவச கலர் டிவி வழங்கும் விழா அண்ணாசிலை அருகில் நேற்று மாலை நடந்தது.

விழாவிற்கு ராணிப்பேட்டை எம்.எல்.. ஆர் காந்தி தலைமை தாங்கினார். நகராட்சி துணைத்தலைவர் பொன். ராஜசேகர், நகர திமுக செயலாளர் ஏ.வி. சரவணன், முன்னிலை வகித்தனர். நகராட்சி தலைவர் ஜெ.எல். ஈஸ்வரப்பன் வரவேற்றார். நிகழ்ச்சியில் தமிழக சட்டத்துறை அமைச்சர் துரைமுருகன் கலந்துக்கொண்டு 6981 பேருக்கு இலவச கலர் டிவிகளை வழங்கி பேசியதாவது:

தேர்தலின்போது பலர் வாக்குறுதிகளை அள்ளி வீசுவார்கள் ஆனால் ஓட்டு வாங்கிக்கொண்டு எதுவும் செய்ய மாட்டார்கள். தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் கருணாநிதி மட்டும்தான்.

குடிசைகளே இல்லாத அளவிற்கு கான்கிரிட் வீடுகள் கட்ட நிதியை ஒதுக்கியுள்ளார். ஆற்காடு தாலுகாவில் 44 ஆயிரம் பேருக்கு இலவச டிவி வழங்கப்பட்டது. வேலு£ர் மாவட்டத்தில் 5,82,231 பேருக்கு இலவச கலர் டிவி வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கருணாநிதி தலைமையில் சொர்க்க லோக ஆட்சி நடைபெறுகிறது. 87 வயதிலும் உழைக்கும் முதல்வர் கருணாநிதி தெய்வ பிறவியாக கருதப்பட வேண்டியவர்.

ஆற்காடு நகருக்கு பாதாள சாக்கடை திட்டம் கொண்டுவர வேண்டும் என்று மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன் இங்கு கோரிக்கை வைத்தார். விரைவில் அவரையும், மாவட்ட செயலாளர் காந்தியையும் அழைத்துக்கொண்டு துணை முதல்வர் மு.. ஸ்டாலினிடம் இந்த கோரிக்கையை எடுத்து வைத்து அந்த திட்டம் செயல்பட முயற்சி எடுப்போம். இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் முன்னாள் எம்.பி. முகமது சகி, முன்னாள் எம்.எல்.. பி.என். சுப்பிரமணியன், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ஏ.கே. சுந்தரமூர்த்தி, ஒன்றியக்குழு தலைவர் கே. மணி, ஒன்றிய திமுக செயலாளர் எம்.வி.பாண்டுரங்கன், தாசில்தார் ராணி, வட்ட வழங்கல் அலுவலர் ராஜசேகரன், கிராம நிர்வாக அலுவலர் சந்திரபூபதி உட்பட பலர் கலந்துகொண்டனர்.