Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மணியனூர் ஆட்டிறைச்சி கூடத்திற்கு ரூ.20 லட்சம் கூடுதல் ஒதுக்கீடு

Print PDF

தினகரன் 07.06.2010

மணியனூர் ஆட்டிறைச்சி கூடத்திற்கு ரூ.20 லட்சம் கூடுதல் ஒதுக்கீடு

சேலம், ஜூன் 7: சேலம் மணியனூர் நவீன ஆட்டிறைச்சி கூடத்திற்கு மேலும் கட்டுமானப் பணிகளுக்காக ரூ.20 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சேலம் மாநகராட்சி கொண்டலாம்பட்டி மண்டலத்திற்கு உட்பட்ட 50வது வார்டு மணியனூரில் ரூ.68 லட்சத்தில் புதிதாக நவீன முறையில் ஆட்டிறைச்சி கூடம் கட்டப்பட்டுள்ளது. விரைவில் இந்த புதிய ஆட்டிறைச்சிக்கூடம் திறக்கப்பட உள்ளது.

இந்நிலையில் நவீன ஆட்டிறைச்சி கூடத்தில் கூடுதலாக ஆடு தங்க வைக்கும் இடம், சுற்றுச்சுவர், தண்ணீர், மின்சார வசதிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதையடுத்து மாநகராட்சி நிர்வாகம் நவீன ஆட்டிறைச்சி கூடத்தில் கூடுதல் பணிகளுக்காக ரூ.20 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது