தினகரன் 09.06.2010
அரூர் பேரூராட்சிக்கு புதிய அலுவலகம்
அரூர், ஜூன் 9: அரூர் தேர்வுநிலை பேரூராட்சிக்கு ரூ. 20 லட்சம் மதிப்பில் புதிய அலுவலக கட்டிடம் கட்டப்படவுள்ளது. இதற்கான பூமி பூஜை நேற்று நடந்தது. இதில் தர்மபுரி மண்டல பேரூராட்சிகளின் உதவி செயற்பொறியாளர் சுபாஸ்போஸ், பேரூராட்சி தலைவர் லட்சுமி, துணை தலைவர் முல்லைரவி, செயல் அலுவலர் திருஞானம், இளநிலை பொறியாளர் கிருபாகரன், துப்புரவு ஆய்வாளர் ரவீந்திரன், பணி ஆய்வாளர் ராஜா மற்றும் பேருராட்சி உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.