Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பேரூராட்சி மன்றத்துக்கு புதிய கட்டிடம்

Print PDF

தினகரன் 10.06.2010

பேரூராட்சி மன்றத்துக்கு புதிய கட்டிடம்

பண்ருட்டி, ஜூன் 10: பண் ருட்டி அருகே தொரப்பாடி பேரூராட்சி அலுவலக கட்டிடம் மிக சிறியதாக உள்ளது. இதன் காரணமாக அலுவலக பணிகள், மன்ற கூட்டம் நடத்த முடியவில்லை.

இதன் தொடர்ச்சியாக பேரூராட்சி மன்ற செயல் பாடுகளை அதிக அளவில் செயல்படுத்தப்பட முடியவில்லை. அரசுக்கு புதிய கட் டிடம் கட்ட பேரூராட்சி மன்றம் கோரிக்கை வைத் தது. இதன் பேரில் அரசு அடிப்படை கட்டமைப்பு பற்றாக்குறை ஈடு செய்யும் மானிய நிதியில் இருந்து ரூ.20 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு மாவட்ட ஆட்சியர் சீத்தாராமன் ஆலோசனைப்படி செயல் அலுவலர் ராம்குமார் மேற்பார்வையில் கட்டிடம் கட்டும் பணி தற்போது நடந்து வருகிறது.

கட்டுமான பணிகளை பேரூராட்சி மன்ற தலைவர் ஜெயலட்சுமி துரைராஜ், துணைத்தலைவர் அருணாசலம் மற்றும் வார்டு உறுப்பினர்கள் பார்வையிட்டனர்.