தினமணி 15.06.2010
கோவை மாநகராட்சிக்கு 4 புதிய பொக்லைன்கள்கோவை
, ஜூன் 14: கோவை மாநகராட்சிக்கு, மாநில அரசு சார்பில் 4 பொக்லைன் இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன.தமிழக அரசின்
12-வது நிதிக்குழு முடிவின்படி திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின்கீழ் அரசின் மானியமாக ரூ. 96 லட்சம் ஒதுக்கப்பட்டது. இத் தொகையில் தலா ரூ. 16 லட்சம் மதிப்பிலான 4 பொக்லைன் இயந்திரங்கள் வாங்கப்பட்டுள்ளன.இந்த இயந்திரங்களை மேயர் ஆர்
.வெங்கடாசலம் கொடி அசைத்து துவக்கிவைத்தார் (படம்). ஒவ்வொரு மண்டலங்களுக்கும் தலா ஒரு இயந்திரம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்பு கட்டடங்களை இடித்தல், சாலையோர மட்புதர்களை அகற்றுதல், குளக்கரைகளில் கொட்டப்படும் கழிவுகளை அகற்றுதல் உள்ளிட்ட பணிகளுக்கு இந்த இயந்திரங்கள் பயன்படுத்தப்படும்.இந்நிகழ்ச்சியில் துணை மேயர் நா
.கார்த்திக், கிழக்கு மண்டலத் தலைவர் எஸ்.எம்.சாமி, எதிர்கட்சித் தலைவர் வெ.ந.உதயக்குமார், சுகாதாரக் குழுத் தலைவர் பி.நாச்சிமுத்து, கவுன்சிலர்கள் ஷோபனா செல்வன், முருகேசன், அப்துல்நாசர் உள்பட பலர் பங்கேற்றனர்.