Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

அரசு கட்டிடம் திறப்பு விழா

Print PDF

தினமலர் 21.06.2010

அரசு கட்டிடம் திறப்பு விழா

ஈரோடு: சூரம்பட்டி நகராட்சியில் மத்திய அரசு நிதி 2.5 லட்சம் ரூபாயில் கட்டப்பட்ட சமுதாயக் கூடம் மற்றும் ஈரோடு எம்.எல்.., தொகுதி நிதி ஐந்து லட்சம் ரூபாயில் கட்டப்பட்ட கழிப்பிடம் ஆகியவற்றை ஈரோடு எம்.எல்.., ராஜா திறந்து வைத்தார்.
சூரம்பட்டி நகராட்சி தலைவர் லோகநாதன் தலைமை வகித்தார். செயல் அலுவலர் மேரியம்மாள், நகராட்சி துணைத் தலைவர் கோபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

*வெண்டிபாளையத்தில் நியமன எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு திட்ட நிதி 25 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட சமுதாயக்கூடம் திறப்புவிழாவுக்கு காசிபாளையம் நகராட்சி தலைவர் சுப்பிரமணியம் தலைமை வகித்தார். தமிழக நியமன எம்.எல்.ஏ., ஆஸ்கர் சி. நிக்லி சமுதாயக்கூடத்தை திறந்து வைத்து பேசினார்.