தினகரன் 21.06.2010
புதிய பள்ளி கட்டிடம் திறப்பு
பெ.நா.பாளையம், ஜூன் 21: கோவை அருகே வெள்ளக்கிணறு பேரூராட்சியில் உள்ள உருமாண்டம்பாளையம் அரசு துவக்கப்பள்ளியில் கூடுதல் வகுப்பறைகள் மற்றும் சத்துணவுக் கூடம் ரூ25 லட்சம் செலவில் மார்ட்டின் குழும நிறுவனத்தினரால் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா மார்ட்டின் குழும நிறுவனங்களின் தலைவர் மார்ட்டின் தலைமையில் நடந்தது. மாவட்ட துவக்க கல்வி அலு வலர் அய்யண்ணன் வரவேற்றார்.
கூடுதல் வகுப்பறை கட்டிடம் மற்றும் புதிய சத்துணவு கூடத்தை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்ன ரசு, ஊரக தொழில் துறை அமைச்சர் பொங் கலூர் பழனிசாமி ஆகியோர் திறந்து வைத் தனர். பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச சீருடை, பள்ளிகளுக்கான கல்வித் கொகை ஆகியவற்றை மார்ட் டின் குழும தலைவர் மார் ட்டின் வழங்கினார். விழா மலரை அமைச்சர் தங்கம் தென்னரசு வெளி யிட மார்ட்டின் பெற்றுக்கொண் டார்.நிகழ்ச்சியில் வெள்ளக்கிணர் பேரூராட்சி தலைவர் அருள் குமார், துடியலூர் பேரூராட்சி தலைவர் சுப்பிரமணியன், சரவணம்பட்டி பேரூராட்சி தலைவர் கதிர் வேல், லீமாரோஸ் மார்ட் டின், வெள்ளக்கிணர் முன் னாள் பேரூராட்சி தலைவர் பழனியப்பன், மாவட்ட திமுக துணைச்செயலாளர் சாந்தாமணி, முஸ்லிம்லீக் மாநில செயலா ளர் முகமது ரபி, சூரியா ராமசா மி, ஒன்றிய துணைச்செயலாளர் ரங்கநாயகி, பேரூராட்சி துணைத்தலைவர் பாலகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பள்ளி தலைமைஆசிரியை கோமதி நன்றி கூறினார்.