Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ஈரோடு பஸ்நிலையத்தில் மூன்று நுழைவு வாயில்கள் அமைக்க மாநகராட்சி முடிவு

Print PDF

தினகரன் 17.08.2010

ஈரோடு பஸ்நிலையத்தில் மூன்று நுழைவு வாயில்கள் அமைக்க மாநகராட்சி முடிவு

ஈரோடு, ஆக. 17: ஈரோடு பஸ்நிலையத்தின் நுழைவுவாயிலில் சுதந்திர தின பொன்விழாநினைவாக நுழைவுவாயில் அமைக்க மாநகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. இதை பரிசீலனை செய்த மாநகராட்சி நிர்வாகம் பேருந்து நிலையத்தின் மூன்று நுழைவு வாயிலிலும் ரூ.20 லட்சம் செலவில் சுதந்திர தின பொன்விழா நுழைவுவாயில் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. மக்களின் கோரிக்கையை ஏற்று நுழைவுவாயில் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்த மேயர் குமார்முருகேஷ், ஆணையாளர் பாலசந்திரன், துணைமேயர் பாபு என்கிற வெங்கடாசலம் மற்றும் மாநகராட்சி கவுன்சிலர்களுக்கு மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மையினர் பிரிவு சார்பில் நன்றி தெரிவித்து கொள்வதாக மாவட்ட பொது செயலாளர் பாட்சா தெரிவித்துள்ளார்.