Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மயிலாடி உழவர்சந்தை பேரூராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்படும்

Print PDF

தினகரன் 20.08.2010

மயிலாடி உழவர்சந்தை பேரூராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்படும்

அஞ்சுகிராமம், ஆக. 20: மயி லாடி பேரூராட்சி அலுவலகத்தில் வாரசந்தை, சுகாதார வளாகம் மற்றும் படிப்பகம் திறப்பு விழா நடந்தது. கலெக்டர் ராஜேந்திர ரத்னூ தலைமை வகித்தார். அமைச்சர் சுரேஷ்ராஜன் கலந்து கொண்டு வாரசந்தை, சுகாதார அலுவலகம் மற் றும் படிப்பகத்தை திறந்து வைத்துபேசினார். அவர் கூறியதாவது:

தி.மு.. அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளது. வாக்குறுதியில் இடம்பெறாத ஏழைகளின் உயிர்காக்கும் கலைஞர் மருத்துவ காப்பீட்டு திட்டம் மற்றும் பல நல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டங்கள் மூலம் பல லட்சம் ஏழை எளிய மக்கள் பயனடைந்துள்ளனர். 5 லட் சம் இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். மயிலாடி பேரூராட்சி வளர்ச்சி பணிகளுக்கு அரசு சார்பில் ரூ.2 கோடி 65 லட்சம் நிதி ஒதுக்கீடு கிடைக்கப்பெற்று 55 பணிகளும், சட்டமன்ற தொகுதி மேம் பாட்டு நிதியில் இருந்து ரூ. 31 லட்சம் நிதி ஒதுக்கீடு கிடைக்கப்பெற்று 18 பணி களும் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மயிலாடி உழவர்சந் தையை மயிலாடி பேரூ ராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைப்பது குறித்து மாவட்ட கலெக்டரிடம் ஆலோசனை நடத்தி விரைவில் பேரூ ராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்படும். கன்னியாகுமரி தொகுதி மக்கள் அனைவருக்கும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் திட்டத்திற்கு தமிழக துணை முதல்வர் 70 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். இப்பணிகள் ஓர் ஆண்டுக்குள் முடியும். இவ்வாறு அவர் பேசி னார்.

நிகழ்ச்சியில் மாவட்ட வேளாண்மை விற்பனைக் குழு தலைவர் ஜி.எம்.ஷா, தென்னக ரயில்வே ஆலோ சனை குழு உறுப்பினர் தாமரை பாரதி, தொலைபேசி ஆலோசனை குழு உறுப்பினர் பொன்.சின்னத்துரை, அகஸ்தீஸ்வரம் ஒன்றிய தலைவர் சோமு, பேரூராட்சி தலைவர் அழகப்பபுரம் டேவிட், கொட்டாரம் யோபு, சுசீந்திரம் சுப்பிரமணியபிள்ளை, அகஸ்தீஸ்வரம் பொன்னம்பெருமாள், தேரூர் முத்து, அரசு வக்கீல் மதியழகன், மயிலாடி பேரூ ராட்சி கவுன்சிலர்கள், துணைதலைவர் சிவதாணு உள்பட பலர் கலந்து கொண்டனர். மயிலாடி பேரூராட்சி செயலர் அலு வலர் செண்பக பாண்டியன் நன்றி கூறினார்.