Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

விடுபட்ட இடங்களுக்கு விரைவில் பாதாள சாக்கடை திட்ட அறிக்கை தயாரிக்க நகராட்சி முடிவு

Print PDF

தினகரன் 20.08.2010

விடுபட்ட இடங்களுக்கு விரைவில் பாதாள சாக்கடை திட்ட அறிக்கை தயாரிக்க நகராட்சி முடிவு

கரூர், ஆக. 20: விடுபட்ட இடங்களுக்கு பாதாள சாக் கடை அமைக்கவும், திட்ட அறிக்கை தயாரிக்கவும் கரூர் நகராட்சி முடிவு செய்துள் ளது.

கரூர் மற்றும் இனாம் கரூர் நகராட்சி பகுதிகளில் உள்ள காவிரி மற்றும் அமரா வதி ஆறுகள் மாசுபடுவதை தவிர்க்கும் பொருட்டு தேசிய நதிநீர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் ரூ.35 கோடி யில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது. மத்திய, மாநில அரசுகளின் மானியத் தொகை, நகராட்சிகளின் பங்களிப்பு தொகையுடன் இத்திட்டம் நிறைவேற்றப்பட்டது.

தமிழ்நாடு குடிநீர் வடி கால் வாரியத்தினால் திட் டம் நிறைவேற்றப்பட்டு வீடுகளுக்கு இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. சுமார் 9 ஆயிரம் இணைப்புகள் வரையே வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. குடியிருப்புகள் மற்றும் வணிக வளாகங்கள் கணக்கிடப்பட்டு இந்த இணைப்பு பிரித்து கொடுக்கப்பட்டு வருகிறது. கரூர் பாலம்மாள்புரத்தில் கரூர் மற்றும் இனாம் கரூர் நகராட்சிகளில் இருந்து வெளியேற்றப்படும் பாதாள சாக்கடை கழிவுநீர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் மூலம் சுத்திகரிப்பு செய்யப்பட்டு வருகிறது.

கரூர் நகராட்சியை பொறுத்தளவில் பாதாள சாக்கடை பணிகள் முடிவுற்ற 36 வார்டுகளிலும் 25,112 கி.மீ திட்டப்பணிகள் விடுபட்டுள்ளது என கண்டறிப்பட்டிருக்கிறது. இப்பகுதிக்கு இணைப்புகளை வழங்க நகராட்சி நிர்வாகம் முயற்சி மேற்கொண்டு வருகிறது.

இந்த பகுதிகளில் புதைவடிகால் பணிகள் மேற்கொள்ளப்பட்டால்தான் திட்டப்பணியினை முழுமை யாக செயல்படுத்த இயலும் என்பதால் பாதாள சாக் கடை திட்டப்பணிகள் விடு பட்ட பகுதிகளில் பணி மேற்கொள்ள விரிவான திட்ட அறிக்கை தயார் செய்வதற்கு திட்ட ஆலோசகரை நியமனம் செய்யவும், அதற்குண்டான கட்டணத்தை திட்ட செயலாக்க நிதியிலிருந்து, வழங்க அனுமதி வேண்டி நகராட்சி நிர்வாக இயக்குனருக்கு அனுமதி கேட்டு முன்மொழிவு அனுப்பப்பட்டிருக்கிறது என நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Last Updated on Friday, 20 August 2010 09:53