Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பாதாள சாக்கடை திட்டம்: பழுதான சாலைகளை சீரமைக்க ரூ. 11 கோடி

Print PDF

தினமணி 28.04.2010

பாதாள சாக்கடை திட்டம்: பழுதான சாலைகளை சீரமைக்க ரூ. 11 கோடி

நாமக்கல், ஆக. 24: நாமக்கல் நகரில் பாதாள சாக்கடை திட்டத்தால் பழுதான சாலைகளை சீரமைக்க ரூ. 11.65 கோடி மதிப்பீட்டில் பிரேரணை தயாரிக்கப்பட்டு அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

நாமக்கல் நகராட்சிப் பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டத்துக்காக குழிகள் தோண்டப்பட்டதால் பழுதான சாலைகளை செப்பனிட வேண்டும் என பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து கோரிக்கை விடுத்த வண்ணம் உள்ளன. இந்நிலையில், பழுதான சாலைகளில் குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் புதிய சாலைகள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

பாதாள சாக்கடை திட்டப் பணிகளில் 85 சதவீதம் மட்டுமே தற்போது முடிவடைந்துள்ளது. இதில், சாக்கடை குழாய்கள் மற்றும் மனித ஆய்வு குழிகள் முடிக்கப்பட்ட தெருக்களில் பழுதடைந்த சாலைகளை மேம்படுத்தி புதிய சாலைகள் அமைக்க சிறப்பு சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ், 39.90 கி.மீ. சாலைகளை புதிதாக அமைக்க ரூ.. 11.65 கோடி மதிப்பில் திட்ட வரைவு தயாரிக்கப்பட்டுள்ளது. இதில், 16.84 கி.மீ. தூரத்துக்கு தார் சாலையும், 23.05 கி.மீ. தூரத்துக்கு சிமெண்ட் சாலையும் அமைக்கப்படுகிறது. இதற்கான பிரேரணைகள் தயாரிக்கப்பட்டு நகர்மன்றத்தில் திங்கள்கிழமை ஒப்புதல் பெறப்பட்டது. இதையடுத்து பிரேரணைகள் அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அரசிடமிருந்து அனுமதியும், நிதி ஒதுக்கீடும் பெறப்பட்ட பின்னர் உடனடியாக சாலைகள் அமைக்கும் பணி துவங்கப்படும் என நகர்மன்றத் தலைவர் இரா. செல்வராஜ் தெரிவித்துள்ளார்.