Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

சுவர்களில் பண்பாட்டு சித்திரம் 10 பாலம், சுரங்கபாதைகள் ரூ 8 கோடியில் புதுப்பிப்பு

Print PDF

தினகரன் 25.08.2010

சுவர்களில் பண்பாட்டு சித்திரம் 10 பாலம், சுரங்கபாதைகள் ரூ 8 கோடியில் புதுப்பிப்பு

சென்னை, ஆக.25: சென்னையில் 10 பாலங்களை பலப்படுத்தி அழகுபடுத்தும் பணி ரூ8 கோடியில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அடையாறு திருவிக பாலம் பலப்படுத்தி அழகுபடுத்தும் பணியை மேயர் மா.சுப்பிரமணியன் நேற்று அதிகாரிகளுடன் சென்று ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் கூறியதாவது:

மாநகராட்சி சார்பில் ஏற்கனவே கட்டப்பட்டுள்ள பாலங்கள், சுரங்கப்பாதைகள் பலப்படுத்தி சீரமைத்து அழகுபடுத்தும் பணி பல்வேறு இடங்களில் மேற்கொள்ளப்பட்டு முடிக்கப்பட்டுள்ளது. தங்கசாலையில் உள்ள பார்த்தசாரதி மேம்பாலம் ரூ50 லட்சம் செலவில் தடுப்புச்சுவர்கள், கான்கிரீட் சிமென்ட் சுவர்கள் அமைத்து புதுப்பிக்கப்பட்டுள்ளது. அண்ணாசாலையில் மகளிர் அரசுக் கலைக்கல்லூரி அருகில் உள்ள மேம்பாலம் சுமார்

ரூ10 லட்சம் செலவில் கான்கிரீட் தடுப்புச் சுவர்கள் அமைக்கப்பட்டு, நடைபாதையில் அழகிய டைல்ஸ்கள் ஒட்டப்பட்டுள்ளன. நுங்கம்பாக்கம் சுரங்கப்பாதை ரூ33 லட்சத்தில் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் தண்டையார் பேட்டை வைத்தியநாதன் பாலம், ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை, சென்ட்ரல் ரயில் நிலையம் எதிரில் உள்ள ஸ்டான்லி மேம்பாலம், கோடம்பாக்கம் மேம்பாலம், திருவான்மியூர் எல்.பி.சாலை பாலம், எழும்பூர் கெங்குரெட்டி சுரங்கப்பாதை, சைதாப்பேட்டை அரங்கநாதன் சுரங்கப்பாதை, தியாகராயநகர் மேட்லி சாலை சுரங்கப்பாதை, தீரன் சிவலிங்கம் சுரங்கப்பாதை, அடையாறு திருவிக பாலம் ஆகிய 10 பாலங்கள், சுரங்கப்பாதைகள்

ரூ8 கோடியே 33 லட்சத்து 57 ஆயிரம் செலவில் பலப்படுத்தி சீரமைத்து, அழகிய டைல்ஸ் ஒட்டப்படுகிறது. இந்த பாலங்கள், சுரங்கப்பாதைகளின் சுவர்களில் தமிழர் பண்பாட்டை விளக்கும் சித்திரங்கள் வரையப்படுகிறது. இவ்வாறு மேயர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

இந்த ஆய்வின் போது மண்டலக்குழுத் தலைவர் ஜெயராமன், மாநகராட்சி மேற்பார்வை பொறியாளர் ராமமூர்த்தி மற்றும் அதிகாரிகள், கவுன்சிலர்கள் உடன் இருந்தனர்.