Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தெற்கு மண்டல அலுவலகம் ஆக.30-ல் திறப்பு

Print PDF

தினமணி 26.08.2010

தெற்கு மண்டல அலுவலகம் ஆக.30-ல் திறப்பு

மதுரை, ஆக. 25: மதுரையில் மாநகராட்சி தெற்கு மண்டல அலுவலகம் வரும் 30-ம் தேதி திறக்கப்படவுள்ளது என, மாநகராட்சி கமிஷனர் எஸ்.செபாஸ்டின் தெரிவித்தார்.

இதுகுறித்து, அவர் தெரிவித்துள்ளதாவது: மதுரை மாநகராட்சி சார்பில் மேலமாரட் வீதியில் தெற்கு மண்டல அலுவலகம் ரூ.2 கோடியில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. 31 முதல் 43 வரையும் 60 முதல் 65 வரையான 19 வார்டுகள் தெற்கு மண்டலத்துக்கு உள்பட்டவை. புதிய அலுவலகத்தை வரும் 30-ம் தேதி மேயர் கோ. தேன்மொழி திறந்து வைக்கிறார். துணை மேயர் பி.எம். மன்னன் முன்னிலை வகிக்கிறார். நிகழ்ச்சியில் மண்டலத் தலைவர்கள், நிலைக்குழுத் தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் அலுவலர்கள் பங்கேற்கவுள்ளனர் என்றார்.