Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

சமுதாயக் கூடம் திறப்பு

Print PDF

தினமணி 30.08.2010

சமுதாயக் கூடம் திறப்பு

பெரியகுளம், ஆக. 29: பெரியகுளம் அருகே உள்ள கெங்குவார்பட்டி, ஜி.கல்லுப்பட்டி ஆகிய பகுதிகளில் சட்டப் பேரவை தொகுதி உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.14.50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள சமுதாயக் கூடம், அங்கன்வாடிக் கட்டடம் ஆகியவற்றின் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட அதிமுக செயலர் தங்க தமிழ்செல்வன் விழாவிற்குத் தலைமை வகித்தார். ஒன்றியச் செயலர் எம்.செல்லமுத்து முன்னிலை வகித்தார். கெங்குவார்பட்டி பேரூராட்சித் தலைவர் ஏ.காட்டுராஜா வரவேற்றார்.கெங்குவார்பட்டி பேரூராட்சியைச் சேர்நத அம்சாபுரம், கோட்டார்பட்டி ஆகிய கிராமங்களில் கட்டப்பட்டுள்ள சமுதாயக் கூடம், அங்கன்வாடிக் கட்டடம் மற்றும் ஜி.கல்லுப்பட்டியில் கட்டப்பட்டுள்ள அங்கன்வாடிக் கட்டடம் ஆகியவற்றை முன்னாள் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைத்தார்.

விழாவில் மாவட்ட நிர்வாகிகள் என்.நல்லவேலுச்சாமி, எம்.அபுதாஹீர், சட்டப் பேரவை தொகுதிச் செயலர் என்.ஆண்டி, இணைச் செயலர் கே.ஜெயா கதிர்காமு, ஒன்றிய நிர்வாகிகள் வி.பிச்சைமணி (இலக்கியஅணி), என்.வி.சின்னச்சாமி, தாமரை கருப்பசாமி, கொடைக்கானல் நகர்மன்ற உறுப்பினர் ஏ.கலை அழகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.