Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மாநகராட்சி தெற்கு மண்டல புதிய அலுவலகம் திறப்பு

Print PDF

தினகரன் 31.08.2010

மாநகராட்சி தெற்கு மண்டல புதிய அலுவலகம் திறப்பு

மதுரை, ஆக.31: மதுரை மாநகராட்சி தெற்கு மண்டலத்திற்கான புதிய அலுவலகம் நேற்று திறக்கப்பட்டது. மதுரை மேலமாரட் வீதியில் புதிய அலுவலகத்தை மேயர் தேன்மொழி திறந்து வைத்தார். மாநகராட்சி கமிஷனர் செபாஸ்டின், துணை மேயர் மன்னன் கலந்து கொண்டனர்.

கமிஷனர் செபாஸ்டின் கூறுகையில், ‘19 வார்டுகளை கொண்ட தெற்கு மண்டலத்திற்கான புதிய அலுவலகம் ரூ.2.25கோடி மதிப்பில் பல்வேறு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது. தற்போது கோட்டையில் இயங்கி வரும் தெற்குமண்டல அலுவலகம் இன்னும் 15நாட்களில் இந்த புதிய அலுவலகத்தில் முழுமையாக செயல்படும், என்றார். மண்டல தலைவர்கள் மாணிக்கம், குருசாமி, இசக்கிமுத்து, நாகராஜன் மற்றும் அதிகாரிகள், கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.