தினகரன் 09.09.2010
அம்பத்தூர் நகராட்சியில் 10 வார்டுகளுக்கு குப்பை தொட்டி
ஆவடி, செப். 9: அம்பத்தூர் நகராட்சி சார்பில், ரூ32 லட்சம் செலவில் சுகாதாரப் பணிக்காக 200 குப்பை தொட்டிகள் வழங்கப்பட உள்ளன. முதல் கட்டமாக 75 குப்பை தொட்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நகராட்சி வளாகத்தில் நேற்று நடந்தது.
நகராட்சி தலைவர் கே.என்.சேகர் தலைமை வகித்து, 10 வார்டுகளுக்கு குப்பை தொட்டிகளை வழங்கினார். பொறியாளர் ரவி, சுகாதார அதிகாரி மணிமாறன், உறுப்பினர்கள் ஜான், அஞ்சா சந்தானம், காயத்ரி மகேந்திரன், தனலட்சுமி மாரிமுத்து உட்பட பலர் கலந்து கொண்டனர். வரும் 20ம் தேதி 125 குப்பை தொட்டிகள் மற்ற வார்டுகளுக்கு வழங்கப்பட உள்ளதாக நகராட்சி தலைவர் சேகர் தெரிவித்தார்.