Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

புதுக்கடையில் ரூ3 லட்சத்தில் தடுப்புச் சுவர் அமைக்கும் பணி

Print PDF

தினமணி 13.09.2010

புதுக்கடையில் ரூ3 லட்சத்தில் தடுப்புச் சுவர் அமைக்கும் பணி

கருங்கல், செப். 12: புதுக்கடை பேரூராட்சிக்குள்பட்ட மாடச்சேரி பகுதியில் ரூ 3 லட்சம் செலவில் தடுப்புச் சுவர் மற்றும் கான்கிரீட் தளம் அமைக்கும் பணியை கிள்ளியூர் எம்எல்ஏ ஜான்ஜேக்கப் ஆய்வு செய்தார். மாடச்சேரி செல்லும் சாலை பழுதடைந்தும், தடுப்புச் சுவர் இல்லாமலும் அப் பகுதி மக்கள் மிகவும் அவதியுற்றனர்.

இதையடுத்து, அப் பகுதியினரின் கோரிக்கையையடுத்து எம்எல்ஏ ஜான்ஜேக்கப், சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ 3 லட்சம் ஒதுக்கீடு செய்தார். அப் பணி தற்போது நடைபெற்று வருகிறது.

அதை அவர் ஆய்வு செய்தார். புதுக்கடை பேரூராட்சி கவுன்சிலர்கள் கார்த்திக், துரை, கிள்ளியூர் ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் பிரான்சிஸ், பாலப்பள்ளம் பேரூராட்சி கவுன்சிலர் பால்ராஜ் உள்ளிடோர் உடனிருந்தனர்.