தினமணி 16.09.2010
மாநகராட்சி மைய அலுவலக முதல் தளம் திறப்பு
திருநெல்வேலி,செப்.15: திருநெல்வேலி மாநகராட்சி மைய அலுவலகத்தில் 50 லட்சத்தில் கட்டப்பட்ட முதல் தளம் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.
மேயர் அ.லெ. சுப்பிரமணியன் தலைமை வகித்து, புதிய முதல் தளத்தைத் திறந்துவைத்தார். துணை மேயர் கா. முத்துராமலிங்கம், ஆணையர் என். சுப்பையன் முன்னிலை வகித்தனர். செயற்பொறியாளர் நாராயணன் நாயர், உதவி ஆணையர் சுல்தானா, மண்டலத் தலைவர்கள் எஸ்.விஸ்வநாதன், எஸ்.எஸ். முகம்மது மைதீன், பாளை. வட்டாட்சியர் சங்கரசுப்பிரமணியன், மாமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்