தினகரன் 22.09.2010
ரூ.7 லட்சத்தில் நடைபாதை
குன்னூர், செப்.22: குன்னூரை அடுத்துள்ள உலிக்கல் பேரூராட்சிக்குட்பட்ட கீழ்பாரதி நகரில் நடைபாதையுடன் கூடிய கழிவு நீர் கால்வாய் அமைக்க வேண்டுமென பல ஆண்டுகளாக கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. சமீபத்தில் நடந்த பாராளுமன்ற தேர்தலின்போது கதர்வாரிய துறை அமைச்சர் ராமச்சந்திரன் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி கொடுத்ததையடுத்து கீழ்பாரதி நகரில் இருந்து மேல்பாரதி நகர் செல்லும் நடைபாதையுடன் கூடிய கழிவு நீர் கால்வாய் அமைக்க அரசு சார்பில் தற்போது ரூ.7 லட்சம் ஒதுக்கப்பட்டு பணி நடைபெற்றது. உடனடியாக நடவடிக்கை மேற்கொண்ட அமைச்சருக்கு அப்பகுதி மக்கள் சார்பில் முன்னாள் மாவட்ட பிரதிநிதி மகாலிங்கம், கிளை செயலாளர் முத்து ஆகியோர் நன்றி தெரிவித்துள்ளனர்.