தினமணி 23.09.2010
அங்கன்வாடி மையம் திறப்பு
திருத்தணி, செப். 22: திருத்தணியை அடுத்த பாப்பிரெட்டிப்பள்ளி கிராமத்தில் ரூ.2.10 லட்சத்தில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையத்தை திருத்தணி எம்எல்ஏ கோ. அரி புதன்கிழமை திறந்து வைத்தார்.
÷திருத்தணி நகராட்சி 21 வார்டு பாப்பிரெட்டிப்பள்ளி கிராமத்தில் அங்கன்வாடி மையம் அமைக்க சம்மந்தப்பட்ட நகராட்சி அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்து வந்தனர். இதையடுத்து திருத்தணி எம்.எல்.ஏ. மேம்பாட்டு பொது நிதியிலிருந்து ரூ.2.10 லட்சத்தில் புதிய அங்கன்வாடி மையம் அமைக்கப்பட்டது.
÷இந்நிலையில் இதன் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக எம்.எல்.ஏ. கோ. அரி கலந்து கொண்டு திறந்து வைத்து பேசினார். பின்னர் அப்பகுதி மக்கள் எம்.எல்.ஏ.விடம் இப்பகுதிக்கு சாலை வசதி செய்து தருமாறு கோரிக்கை வைத்தனர். விரைவில் அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என கோ. அரி, எம்.எல்.ஏ. உறுதி கூறினார்.
÷திருத்தணி அதிமுக நகரச் செயலர் டி. சௌந்தர்ராஜன் தலைமை வகித்தார். நகர்மன்ற உறுப்பினர் கேபிள் சுரேஷ் வரவேற்றார். முன்னாள் கவுன்சிலர் ஆறுமுகம் முன்னிலை வகித்தார். விழாவில் நகர்மன்ற உறுப்பினர் நிர்மல், திருத்தணி இளைஞர், இளம்பெண்கள் பாசறை நகரச் செயலர் ஸ்டுடியோ ஜி. நந்தா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.