தினமலர் 24.09.2010
நகராட்சி வளாகத்தில் ரூ. 1.30 லட்சம் செலவில் பூங்கா
உடுமலை : உடுமலை நகராட்சி வளாகத்தில் 1.30 லட்சம் ரூபாய் செலவில் புதிதாக பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது. உடுமலை நகராட்சி வளாகத்தின் முன் பகுதியிலுள்ள காலியிடத்தில் 1.30 லட்சம் ரூபாய் செலவில் புதிதாக பூங்கா அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. பல்வேறு வகையான மலர் மற்றும் குரோட்டன்ஸ் வகை செடிகள், மரங்கள், நீரூற்றுக்கள் அமைக்கப்பட உள்ளதாக நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.