தினகரன் 27.09.2010
திருவள்ளூர் நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டத்தை விரைந்து முடிக்க வலியுறுத்தல்
திருவள்ளூர், செப்.27: திருவள்ளூர் மாவட்ட பாமக சமூக முன்னேற்ற சங்க பொதுக் குழு கூட்டம், திருவள்ளூரில் நடந்தது. மாநில துணைத் தலைவர் செல்வம் தலைமை வகித்தார். சீத்தாராமன், பாலயோகி, சேகர், ரமேஷ் முன்னிலை வகித்தனர். உமாபதி வரவேற்றார்.
முன்னாள் மத்திய அமைச்சர் வேலு, தமிழ்நாடு தேர்வாணைய குழு முன்னாள் தலைவர் காசிவிஸ்வநாதன் ஆகியோர், மாணவர்களுக்கு பரிசு வழங்கினர்.
கல்விக்கடன் கேட்டு விண்ணப்பிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் கடன் வழங்கவும், எக்ஸ்பிரஸ் ரயில்கள் திருவள்ளூரில் நின்று செல்லவும், திருவள்ளூர் நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிர்வாகிகள் வெங்கடேசன், மோகன்குமார், தினேஷ்குமார், குமார், மாணிக்கம் உட்பட பலர் பங்கேற்றனர். ராஜ்மோகன் நன்றி கூறினார்.