தினகரன் 29.09.2010
சிறுவர் பூங்கா திறப்பு
திருவொற்றியூர் செப். 29: திருவொற்றியூர் நகாரட்சி எண்ணூர் அனல் மின்நிலைய குடியிருப்பில் அமைச்சர் கே.பி.பி.சாமி தொகுதி மேம்பாட்டு நிதி ரூ5 லட்சம் செலவில் கலையரங்கமும், நகராட்சி சார்பில் ரூ5 லட்சத்தில் சிறுவர் பூங்காவும் அமைக்கப்பட்டன.
இதன் திறப்பு விழா நடந்தது.நகராட்சி துணை தலைவர் ராமநாதன் தலைமை வகித்தார். அமைச்சர் கே.பி.பி.சாமி கலையரங்கம் மற்றும் சிறுவர் பூங்காவை திறந்து வைத்தார். கவுன்சிலர் ஜெய்சங்கர் வரவேற்றார். அனல் மின்நிலைய தலைமை பொறியாளர் சாந்தகுமார். நகராட்சி ஆணையர் கலைச் செல்வன் மற்றும் கே.பி.சங்கர், திமுக நகரச் செயலாளர் தனியரசு உள்பட பலர் கலந்து கொண்டனர். சௌந்தர்ராஜன் நன்றி கூறினார்.