Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ஆக்கிரமித்து ஜல்லி உடைப்பு வைத்தியநாதன் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் கடை கட்டப்படுமா?

Print PDF

தினகரன் 05.10.2010

ஆக்கிரமித்து ஜல்லி உடைப்பு வைத்தியநாதன் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் கடை கட்டப்படுமா?

தண்டையார்பேட்டை, அக். 5: வைத்தியநாதன் பாலத்தை ஆக்கிரமித்து ஜல்லி உடைக்கும் தொழில் நடக்கிறது. இதை அகற்றி அப்பகுதியில் மாநகராட்சி கடைகள் கட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தண்டையார்பேட்டை வைத்தியநாதன் தெருவில் ரயில்வே மேம்பாலம் உள்ளது. இதற்கு வைத்தியநாதன் மேம்பாலம் என்று பெயர்.

இதன் ஒருபுறத்தில் இளையமுதலி தெருவில் இருந்து தண்டையார்பேட்டை ரயில் நிலையம் செல்லும் பாதையில் மேம்பாலத்தின்கீழ் மாநகராட்சிக்கு சொந்தமான இடம் தனியார் ஆக்கிரமிப்பால் பாழடைந்து வருகிறது.

ஒருபுறம் மேம்பாலத்தில் மாட்டு சாணத்தை தட்டி காய வைக்கின்றனர். மறுபுறத்தில், செங்கல் ஜல்லி உடைக்கும் தொழிலகமாக மாறி ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.

இதனால் ஒவ்வொரு மழையின் போதும் இங்கு தண்ணீர் தேங்கி மோசமாகிறது. தண்டையார்பேட்டை ரயில் நிலையத்துக்கு செல்லும் பயணிகள் மிகவும் அவதிப்படுகின்றனர்.

சென்னை நகரின் பல இடங்களில் பாலத்தின் கீழ் உள்ள இடங்கள் கடைகள் கட்டப்பட்டு, வருவாய் தரும் இடங்களாக மாறியுள்ளன.

அதேபோல வைத்தியநாதன் மேம்பாலத்துக்கு கீழ் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான இடங்களிலும் ஆக்கிரமிப்புகளை அகற்றி, கடைகள் அல்லது குடோன்கள் கட்டி விட்டால் வருவாய்க்கு வருவாயும் கிடைக்கும், அந்த பகுதியும் சுத்தமாக இருக்கும் என ரயில் பயணிகள் மட்டுமின்றி அப்பகுதி மக்களும் கோரிக்கை வைத்துள்ளனர்