தினகரன் 05.10.2010
குழித்துறை நகராட்சி படிப்பகத்துக்கு புதிய கட்டிடம்
மார்த்தாண்டம் அக்
.5: குழித்துறை நகராட்சி வாவுபலி மைதானத்தின் அருகே நகராட்சி படிப்பகம் செயல்பட்டு வந்தது. இந்த கட்டிடம் பழுதடைந்து இடிந்து விழும் நிலை ஏற்பட்டதால் படிப்பகத்துக்கு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து எம்பி மேம்பாட்டு நிதியில் இருந்து புதிய கட்டிடத்துக்கு ரூ2.5 லட்சம் ஒதுக்கீடு செய்யப் பட்டது. இதற்கான பணி தொடக்க விழா நேற்று நடந்தது. குழித்துறை நகர்மன்ற தலைவர் பொன். ஆசைத்தம்பி பணியை தொடங்கி வைத்தார். இதில் நகராட்சி இன்ஜினியர் ரமேஷ்,கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.