தினகரன் 05.10.2010
எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதியில் நெல்லை மாநகராட்சிக்கு ரூ.11 லட்சத்தில் குடிநீர் லாரிநெல்லை மாநகராட்சிக்கு வாங்கப்பட்ட புதிய குடிநீர் லாரியை ராமசுப்பு எம்
.பி தொடங்கி வைத்தார். அருகில் மேயர் ஏ.எல்.சுப்பிரமணியன், துணைமேயர் முத்துராமலிங்கம், ஆணையர் சுப்பையன் மற்றும் பலர்.நெல்லை
, அக்.5: எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதி யில் வாங்கப்பட்ட புதிய குடிநீர் லாரி நேற்று நெல்லை மாநகராட்சியில் ஒப்படைக்கப்பட்டது. நெல்லை மாநகராட்சி விரிவாக்க பகுதிகளில் குடி நீர் விநியோகம் செய்ய போதிய லாரிகள் இல்லாமல் இருந்தது. இதுகுறித்து நெல் லை தொகுதி எம்.பி. ராமசுப்புவிடம் முறையீடு செய்யப்பட்டது. இதையடுத்து அவர் தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.10 லட்சம் ஒதுக்கீடு செய் தார். மாநகராட்சியில் ரூ.1.32 லட்சம் சேர்த்து, மொத்தம் ரூ.11.32 லட்சத் தில் புதிய குடிநீர் லாரி வாங்கப்பட்டது.நெல்லை மாநகராட்சி யில் நேற்று நடந்த நிகழ்ச்சி யில் லாரியை ராமசுப்பு எம்
.பி. மேயரிடம் ஒப்படைத்தார். கமிஷனர் சுப்பை யன், துணைமேயர் முத்துராமலிங்கம், மேலப்பாளையம் மண்டல தலைவர் மைதீன், காங். பிரமுகர்கள் அமீர் கான், சுத்தமல்லி முருகேசன், வாகை கணேசன், பேட்டை சுப்பிரமணியன், தச்சை முருகேசன், இஸ்மாயில், கவுன்சிலர்கள் கந்தன், அப்துல்வஹாப், தியாகராஜன், நமச்சிவாயம், பாண்டிக்குமார், பேபி கோபால், உமாபதிசிவன், ராஜேஸ்வரி, ரேவதி அசோக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.இக்குடிநீர் வாகனம் மூலம் நெல்லையின் பல பகுதிகளுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் விநியோகம் செய்யப்பட உள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது
.