தினமலர் 07.10.2010
நகராட்சி புதிய அலுவலக கட்டடம் இன்று திறப்பு
வால்பாறை: வால்பாறை நகராட்சி சார்பில் கட்டப்பட்டுள்ள புதிய நகராட்சி அலுவலகம், பூங்கா மற்றும் நகராட்சி ஆய்வு மாளிகை ஆகிய கட்டடங்கள் திறப்பு விழா மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மாவட்ட கலெக்டர் உமாநாத் தலைமையில் இன்று(7ம் தேதி) காலை 11.30 மணிக்கு நடக்கிறது.புதிய கட்டடத்தை அமைச்சர் பழனிச்சாமி, சட்டசபை மனுக்கள் குழுத்தலைவர் கோவைதங்கம் ஆகியோர் திறந்து வைக்கின்றனர்.விழாவில் பொள்ளாச்சி எம்.பி.., சுகுமார், முன்னாள் எம்.எல்.ஏ., சிங்காரவேலு, நகராட்சித்தலைவர் கணேசன், துணைத்தலைவர் ராஜதுரை, பொறியாளர் சுப்பிரமணியம் உட்பட பலர் பேசுகின்றனர். நகராட்சி செயல்அலுவலர் ராஜ்குமார் நன்றி கூறுகிறார்.