தினகரன் 07.10.2010
ரூ17 கோடி செலவில் 22 மார்க்கெட்கள் புதுப்பிக்கப்படுகிறதுமும்பை
, அக்.7:புறநகர் பகுதிகளில் உள்ள 22 மார்க்கெட்களை ரூ17 கோடி செலவில் புதுப்பிக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது. மும்பை மற்றும் புறநகர் பகுதிகளில் மாநகராட்சிக்கு சொந்தமான மார்க்கெட்களை புதுப்பித்து புது வடிவம் மற்றும் சின்னம் கொடுக்கும் திட்டத்தை மாநகராட்சி நிறைவேற்ற முடிவு செய்துள்ளது. இது பற்றி மாநகராட்சி நிலைக்குழு தலைவர் ராகுல் ஷெவாலே கூறியதாவது:‘
தூய்மையான மார்க்கெட், சுத்தமான மார்க்கெட்’ என்ற திட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கையை மாநகராட்சி மேற்கொள்ளும். இதற்காக மேற்கு புறநகர் பகுதிகளில் செயல்படும் 11 மார்க்கெட்களும் கிழக்கு புறநகர் பகுதிகளில் 11 மார்க்கெட்களும் தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளன.தனியார் மார்க்கெட்களுக்கு இணையாக இந்த மாநகராட்சி மார்க்கெட்கள் மேம்படுத்தப்படும்
. அனைத்து மார்க்கெட்களும் ஒரே மாதிரியான தோற்றம் கொண்டிருக்கும், புதிய சின்னம் ஒதுக்கப்படும். இதற்காக ரூ17 கோடி செலவில் இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மாநகராட்சி மார்க்கெட்கள் புதுப்பிக்கப்பட்டு விட்டால் தனியார் மால்கள் போன்ற தோற்றத்தை பெறும் என்பதில் சந்தேகம் இல்லை. இந்த திட்டப்பணி அடுத்த மாதம் தொடங்கும். மார்க்கெட்களை சுத்தம் செய்து தூய்மையாக வைத்திருக்கும் பணி துப்புரவு பணியில் நவீன தொழில்நுட்பத்துடன் செயல்படுபவர்களிடம் ஒப்படைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.