Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மழைநீரை அகற்ற ரூ.40 லட்சத்தில் 7 மின் மோட்டார்கள்

Print PDF

தினமணி 07.10.2010

மழைநீரை அகற்ற ரூ.40 லட்சத்தில் 7 மின் மோட்டார்கள்

சென்னை, அக்.6: மழைநீரை அகற்றுவதற்காகரூ.40 லட்சம் செலவில் புதியதாக 50 எச்.பி. திறன் கொண்ட 7 மோட்டார்கள் வாங்கப்பட்டுள்ளன என்றார் மேயர் மா.சுப்பிரமணியன்.

வடசென்னையில் பி கால்வாய், தென்சென்னையில் மாம்பலம் கால்வாய் தூர்வாரும் பணியினை புதன்கிழமை நேரில் பார்வையிட்டு மேயர் மா.சுப்பிரமணியன் கூறியது:

வீராங்கல் ஓடை, விருகம்பாக்கம் கால்வாய், கொளத்தூர், மாதவரம் உபரி கால்வாய், வடசென்னையில் பி கால்வாய் போன்றவை பொதுப்பணித்துறை மூலம் தூர்வாரி சீர்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளனமழைக்காலத்துக்கு முன்பாகவே கால்வாய்கள் தூர்வாரும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது.

÷மேலும் தாழ்வான பகுதிகளில், சுரங்கப் பாதைகளில் மழைநீர் அகற்றுவதற்காக சுமார் 60 மோட்டார் பம்புகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

மழைநீர் தேக்கம் ஏற்பட்டால் நீரை அகற்றுவதற்காக புதிதாக 50 எச்.பி. திறன் கொண்ட 7 மோட்டார்கள்,ரூ.40.42 லட்சத்தில் வாங்கி தயாராக வைக்கப்பட்டுள்ளன. அனைத்து மண்டல அலுவலகங்களிலும், தேவையான மோட்டார் பம்புகள் கையிருப்பில் வைக்கப்பட்டுள்ளன என்றார் மா.சுப்பிரமணியன்.