தினகரன் 11.10.2010
திருக்கோவிலூர் பேரூராட்சியில் துப்புரவு பணிக்கு புதிய வாகனம் பேரூராட்சி தலைவர் இயக்கினார்
திருக்கோவிலூர்
, அக். 11: திருக்கோவிலூர் பேரூராட்சிக்குட்பட்ட 18 வார்டுகளிலும் கடந்த ஒன்றரை மாதங்களாக செயல் அலுவலர் முயற்சியால் இரவு நேரங்களில் துப்புரவு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இருந்தாலும் போதிய வாகன வசதியில்லாத காரணத்தால் உரிய நேரத்தில் துப்புரவு பணிகளை மேற்கொள்ள முடியாமல் ஊழியர்கள் திணறி வந்தனர். இதையடுத்து பேரூராட்சி அதிகாரிகள் துப்புரவு பணிகளை துரிதப்படுத்துவதற்காகவும், நகரை அழகு படுத்தும் நோக்கில் புதிய லாரி வாங்க திட்டமிட்டனர்.அதன்படி ரூபாய்
.10 லட்சம் மதிப்பில் துப்புரவு பணிக்காக புதிய லாரி வாங்கப்பட்டது. புதிய லாரியை பேரூராட்சி தலைவர் ஆண்டாள் இயக்கி வைத்தார். அப்போது முன்னாள் பேரூராட்சி தலைவர் செல்வராஜ், துணைத்தலைவர் ஜானிபாஷா, செயல்அலுவலர் தமிழ்ச்செல்வன், தலைமை எழுத்தர் அன்பழகன், கவுன்சிலர்கள் குணா, சுப்பு, சாந்தபிரபாமணி, நிர்மலாசெந்தாமரை, கோவிந்து கலைவாணிசக்திவேல் ஆகியோர் இருந்தனர்.