Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

குப்பை அள்ளுவதற்காக புதிய லாரி

Print PDF

தினமணி 14.10.2010

குப்பை அள்ளுவதற்காக புதிய லாரி

திருக்கோவிலூர், அக். 13: திருக்கோவிலூர் பேரூராட்சிக்கு புதிதாக வாங்கப்பட்ட லாரி குப்பை அள்ளும் பணிக்காக அண்மையில் வழங்கப்பட்டது.

÷திருக்கோவிலூர் நகரப் பகுதியில் அன்றாடம் சேகரமாகும் குப்பைக் கழிவுகளை அப்புறப்படுத்தி, உரக்கிடங்கிற்கு குப்பைகளை எடுத்துச்செல்ல போதிய வாகன வசதியின்றி பேருராட்சி துப்புரவு பணியாளர்கள் அவதிப்பட்டனர்.

÷இதையடுத்து குப்பை ஏற்றிச் செல்வதற்காக | 10 லட்சம் செலவில் புதிதாக லாரி வாங்கப்பட்டது. இதனை துப்புரவுப் பணிக்காக ஒப்படைக்கும் விழாவாக நடைபெற்றது. பேருராட்சித் தலைவர் ஆர். ஆண்டாள் குத்துவிளக்கேற்றி துவக்கிவைத்தார்.

அப்போது முன்னாள் பேருராட்சித் தலைவர் டி. செல்வராஜ், செயல் அலுவலர் தமிழ்ச்செல்வன், கவுன்சிலர் டி. குணா மற்றும் பேரூராட்சி ஊழியர்கள், துப்புரவுப் பணியாளர்கள் உடனிருந்தனர்.