தினகரன் 28.10.2010
பேரூராட்சி கூட்ட அரங்கு திறப்புவிழா
பாலக்கோடு, அக்.28: பாலக்கோடு பேரூராட்சி அலுவலகத்தில் புதிய கூட்ட அரங்கம் ரூ.12.5 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது. இந்த கூட்ட அரங்கத்தின் திறப்பு விழா 28ம் தேதி (இன்று) நடக்கிறது.
பேரூராட்சி செயல் அலுவலர் ராஜேந்திரன் வரவேற்கிறார். மாவட்ட ஆட்சியர் ஆனந்தகுமார் கூட்ட அரங்கத்தை திறந்துவைக்கிறார். தர்மபுரி எம்பி தாமரைச் செல்வன், பாலக்கோடு எம்எல்ஏ அன்பழகன், பேரூராட்சி தலைவர் முரளி, திமுக மாவட்ட பொறுப்பாளர்கள் முல்லைவேந்தன், இன்பசேகரன், எம்எல்ஏக்கள் வேலுச்சாமி, டில்லிபாபு, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் வெங்கடேஸ்வரன், ஒன்றியக்குழு தலைவர் முருகன், பேரூராட்சி துணை தலைவர் பத்தேகான், உதவி இயக்குனர் ருக்மணி உள்ளிட்ட பலர் கலந்து கொள்கின்றனர்.