Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கி.கிரியில் ரூ.33 கோடியில் பாதாள சாக்கடை திட்டப் பணி துவக்கம்

Print PDF

தினமலர்              03.11.2010

கி.கிரியில் ரூ.33 கோடியில் பாதாள சாக்கடை திட்டப் பணி துவக்கம்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் 33 கோடி ரூபாய் செலவில் பாதாள சாக்கடை அமைக்கும் பணிகள் துவங்கியது. தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து நகராட்சிகளிலும் பாதாள சாக்கடை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதன்படி கிருஷ்ணகிரி நகரில் பாதாள சாக்கடை அமைக்கும் பணிக்காக முதலில் 18 கோடி ரூபாய் மதிப்பில் திட்ட மதிப்பீடு செய்யப்பட்டது.

தற்போதைய நிலவரபடி பாதாள சாக்கடை திட்டத்திற்காக சுத்திகரிப்பு நிலையம் அமைப்பது உள்ளிட்ட அனைத்து பணிகளுக்கான மதிப்பீடு உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி நகரில் பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்த 33 கோடி ரூபாய் திட்ட மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. முதல்கட்டமாக தேவசமுத்திரம் ஏரியில் 7 கோடியே 2 லட்ச ரூபாய் மதிப்பில் சுத்தகரிப்பு நிலையம் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. நகரில் உள்ள 33 வார்டுகளில் ஒரே கட்டமாக பணிகள் செய்து முடிக்க முடிவு செய்யப்பட்டது.

அனைத்து பகுதிகளிலும் ஒரே நேரத்தில் பணிகளை துவக்கினால் குடிநீர் விநியோகம், டெலிஃபோன் சேவை மற்றம் போக்குவரத்து வசதி முற்றிலும் பாதிக்கப்படும் நிலை உருவானது. இதனை போக்க ஒவ்வொரு பகுதியாக தேர்வு செய்து பணிகளை ஒன்னரை ஆண்டுகளுக்குள் முடிக்க நகராட்சி கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. கிருஷ்ணகிரி லண்டன்பேட்டையில் பாதாள சாக்கடை அமைக்கும் பணிக்கான துவக்க விழா நடந்தது. எம்.எல்.., செங்குட்டுவன் தலைமை வகித்தார். நகராட்சி தலைவர் பரிதநவாப், கமிஷனர் லோகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் நவாப், எம்.எல்..,நரசிம்மன், வேப்பனப்பள்ளி யூனியன் சேர்மேன் முருகன், பர்கூர் யூனியன் சேர்மேன் ராஜேந்திரன். நகராட்சி பொறியாளர் ராஜேந்திரன் மற்றும் நகராட்சி கவுன்சிலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Last Updated on Thursday, 04 November 2010 04:13