தினகரன் 15.11.2010
இடலாக்குடி வெள்ளாளர் தெருவில் ரூ3 லட்சத்தில் சமுதாய கூடம் ராஜன் எம்.எல்.ஏ அடிக்கல் நாட்டினார்
நாகர்கோவில், நவ. 15: நாகர்கோவில் நகராட்சி 19வது வார்டு பகுதியில் இடலாக்குடி வெள்ளாளர்தெரு உள்ளது. இங்கு சமுதாய நல கூடம் கட்டி தரவேண்டும் என கவுன்சிலர் பியாசாஹாஜிபாபு தலைமையில் அப்பகுதி மக்கள் ராஜன் எம்.எல்.ஏவிடம் கோரிக்கை வைத்தனர். அதை ஏற்ற ராஜன் எம்.எல்.ஏ சமுதாய நலக்கூடம் கட்ட தனது சட்டமன்ற மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ3 லட்சம் ஒதுக்கினார்.
இதை தொடர்ந்து சமுதாய நலக்கூடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டுவிழா நேற்று இடலாக்குடி வெள்ளாளர் தெருவில் நடந்தது.
விழாவிற்கு ஊர் நிர்வாகி மகாதேவன்பிள்ளை தலைமை வகித்தார். கவுன்சிலர் பியாசாஹாஜிபாபு முன்னிலை வகித்தார். 10வது வட்ட திமுக செயலாளர் ஹாஜிபாபு வரவேற்றார். ராஜன் எம்.எல்.ஏ அடிக்கல்நாட்டி பேசினார்.
நிகழ்ச்சியில் கவுன்சிலர் அருள்ராஜ், பாவலர் சித்திக், அப்துல்காதர், ஊர் தலைவர் சிவன்பிள்ளை, செயலாளர் இளங்கோவன், பொருளாளர் வீரமணி, முன்னாள் நிர்வாகிகள் பழனி, ராஜூ, மற்றும் ஜபகர்சாதிக், யூசுப் உள்பட பலர் கலந்து கொண்டனர்.