Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ரூ50 லட்சம் மதிப்பில் பேருந்து நிலையத்தில் கான்கிரீட் தளம் நகராட்சி கூட்டத்தில் தலைவர் தகவல்

Print PDF

தினகரன்                  18.11.2010

ரூ50 லட்சம் மதிப்பில் பேருந்து நிலையத்தில் கான்கிரீட் தளம் நகராட்சி கூட்டத்தில் தலைவர் தகவல்

பள்ளிபாளையம், நவ.18: குமாரபாளையம் நகராட்சி பேருந்து நிலையத்தில் கான்கிரீட் தளம் அமைக்க 50 லட்சம் ரூபாயினை தமிழக அரசு ஒதுக்கியுள் ளது என நகராட்சி கூட்டத்தில் தலைவர் தெரிவித்தார்.

குமாரபாளையம் நகர மன்ற கூட்டம் தலைவர் சேகர் தலைமையில் நடைபெற்றது. துணைத்தலைவர் மதிவாணன், ஆணையாளர் மாணிக்கவாசகம், பொறி யாளர் ரவி, துப்புரவு ஆய் வாளர் இளங்கோவன் ஆகி யோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பல்வேறு பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

நாரயணாநகர் பகுதி யில் உள்ள ஆக்கிரமிப்புகளை நகராட்சி பணியாளர்கள் அப்புறப்படுத்தி வருகின்றனர். முன்னறிவிப்பு இன்றி செயல்படுவதால் பலருக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆக்கிரமிப்பு அகற்றப்படும் பணியினை நிறுத்த வேண்டும் என துணைத்தலைவர் மதிவாணன் கேட்டுக்கொண்டார். முறையாக தண்டோரா போட்டுத்தான் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகிறது என ஆணையாளர் தெரிவித்தார். ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும் என தலைவர் சேகர் அறிவித்தார். நாய் தொல்லை அதிகரித்து விட்டது. நாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என அதிமுக உறுப்பினர் பாஸ்கர் கேட் டார். நாய்களை பிடித்து கருத்தடை அறுவை சிகிச்சை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக சுகாதார ஆய்வாளர் இளங்கோவன் தெரிவித்தார்.

சாக்கடையில் கட்டிடங்களின் மண்ணை கொட்டுவதால் சாக்கடை அடைத்துகொள்கிறது. இதனால் தண்ணீர் செல் லாமல் தேங்கி நிற்கிறது என உறுப்பினர் துர்க்காரவி தெரிவித்தார். எனது வார்டில் குப்பைகள் தேங்கி கிடக்கிறது. அகற்றப்பட வேண்டும் என உறுப்பினர் முருகேசன் தெரிவிக்க, கடந்த வெள்ளியன்றுதான் உங்கள் வார்டில் ஒட்டுமொத்த துப்புரவு பணிகள் நடைபெற்றது என துப்புரவு அதிகாரி பதிலளித்தார். நகரில் பல இடங்களில் டயர்களும், இளநீர் கூடுகளும் கொட்டி கிடக்கிறது. இதனால் சுகாதாரம் கெடுகிறது என துணைத்தலைவர் மதிவாணன் தெரிவித்தார். இவை அனைத்தும் அப்புறப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஆணையாளர் தெரிவித்தார்.

நடராஜா நகரில் கடைகளுக்கு முன்னால் மண்கொட்டி மேடை போட்டு விட்டதால் தண்ணீர் தேங்கி நிற்கிறது என அதிமுக உறுப்பினர் பாஸ்கர் புகார் செய்தார். நெடுஞ்சாலை துறைக்கு தெரிவித்து மண்மேடை களை அப்புறப்படுத்தப்படும் என தலைவர் பதிலளித்தார். சந்தைப்பேட் டையில் குப்பை கொட்டி கிடக்கிறது என திமுக உறுப்பினர் செல்வம் தெரிவித்தார். நகராட்சியில் குப்பைகளை கொட்ட இடம் இல்லை. இது பெரும் பிரட்சனையாக உள்ளது. இவற்றை எதிர்கட்சியினர் தங்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்கின்றனர். இது பொதுவான பிரச்னை இதில் கட்சி கண்ணோட் டம் கூடாது. உரிய தீர்வை சொன்னால் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தலைவர் அறிவித்தார்.

பேருந்து நிலையத்தில் உள்ள வாகனங்களை அப்புறப்படுத்திவிட்டு அங்கு கடைகளை கட்டினால் கூடுதல் வருவாய் கிடைக் கும். சாலைகளை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என திமுக உறுப்பினர் சண்முகம் தெரிவித்தார்.

பேருந்து நிலையத்தில் கான்கிரீட் தளம் அமைக்க அரசு 50 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளது. என தலைவர் பதிலளித்தார். தொடர்ந்து விவாதம் நடைபெற்றது.