Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கலையரங்கம் திறப்பு

Print PDF

தினமணி          19.11.2010

கலையரங்கம் திறப்பு

புதுச்சேரி, நவ. 18: புதுச்சேரி உழவர்கரை நகராட்சி குறிஞ்சி நகர்ப் பகுதியில் உள்ள பூங்காவில் 83 சதுர மீட்டர் பரப்பளவில் ரூ.9.17 லட்சம் செலவில் கட்டப்பட்ட கலையரங்கம் அண்மையில் திறக்கப்பட்டது. ÷லாஸ்பேட்டை தொகுதி எம்எல்ஏவும், பொதுப்பணித்துறை அமைச்சருமான ஷாஜகானின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.9.17 லட்சம், கடந்த 2008- 09-ம் நிதியாண்டில் ஒதுக்கப்பட்டு பணிகள் நடந்து வந்தன.

÷உள்ளாட்சித் துறை அமைச்சர் எ.நமச்சிவாயம், கலையரங்கத்தை தொடங்கி வைத்தார். அமைச்சர் ஷாஜகான், கவுன்சிலர் கே.ருக்மணி, குறிஞ்சி நகர் நலவாழ்வுச் சங்க நிர்வாகிகள் புருஷோத்தமன், பீட்டர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.