Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ஆறுமுகனேரி பேரூராட்சிக்கு ரூ. 23 லட்சத்தில் புதிய கட்டடம்

Print PDF

தினமணி            30.11.2010

ஆறுமுகனேரி பேரூராட்சிக்கு ரூ. 23 லட்சத்தில் புதிய கட்டடம்

ஆறுமுகனேரி, நவ. 29: ஆறுமுகனேரி தேர்வுநிலை பேரூராட்சிக்கு ரூ. 23 லட்சத்தில் புதிய கட்டடம் கட்டுவதற்கு பேரூராட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஆறுமுகனேரி பேரூராட்சியின் கூட்டம், அதன் தலைவர் சா.பொன்ராஜ் தலைமை யில் நடைபெற்றது.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட பிற தீர்மானங்கள் வருமாறு: குடிநீர்த் தட்டுப்பாடு உள்ள பகுதிகளில் ஆழ்குழாய் மூலம் தண்ணீர் பெறும் பொது நல்லி அமைப்பது, 2010-11-ம் ஆண்டு சிறப்பு சாலைகள் திட்டத்தின் கீழ் 11-வது வார்டு அய்யாத்துரைபுரம், 3-வது வார்டு எஸ்.எஸ்.கோயில்தெரு, 6-வது வார்டுகந்தசாமிபுரம்,9-வது வார்டு மணக்காடு, 5-வது வார்டு ஏஐடியூசி காலனி மற்றும் 18-வது வார்டு பெருமாள்புரம் ஆகிய பகுதிகளில் சிமென்ட் சாலைகள் அமைப்பது.

மழைக்காலங்களில் பிரதான சாலைகளில் தண்ணீர் தேங்குவதைத் தடுக்க மழைநீர் சேகரிக்கும் தொட்டி அமைத்தல் உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.