Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

அண்ணா சாலையில் கட்டப்படும் 2 பாலங்களுக்கான தூண்கள் மார்ச்சுக்குள் அமைக்கப்படும்

Print PDF

தினகரன்              09.12.2010

அண்ணா சாலையில் கட்டப்படும் 2 பாலங்களுக்கான தூண்கள் மார்ச்சுக்குள் அமைக்கப்படும்

சென்னை, டிச.9: சென்னை அண்ணா சாலையில் கட்டப்படும் இரண்டு மேம்பாலங்களுக்கான தூண்கள் அமைக்கும் பணி, 2011ம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் முடிவடையும் என்று நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன் கூறினார்.

தமிழக அரசின் நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை சார்பில், அடையாறு திரு.வி.. பாலம் அருகே மூன்று வழித்தட உயர்மட்ட பாலத்துக்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. சென்னை மாநகராட்சி மேயர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன், புதிய பாலத்துக்கான அடிக்கல் நாட்டி பேசியதாவது:

போக்குவரத்து நெரிசல் ஏற்படும் பகுதிகளில், தொடர்ந்து பாலங்கள் கட்ட தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. சென்னை முக்கிய பகுதிகளை இணை க்கும் அடையாறு திரு. வி.. பாலம் பகுதியில் அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதையொ ட்டி, தற்போது உள்ள பாலத்தை ஒட்டியே 333 மீட்டர் நீளம், 11 மீட்டர் அகலம் கொண்ட 3 வழிப்பாதையுடன் ரூ13 கோடியில் புதிய பாலம் கட்டப்பட உள்ளது. இந்த புதிய பாலத்தின் பணிகளை 15 மாதங்களில் முடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னை முக்கிய பகுதிகளை இணை க்கும் அடையாறு திரு. வி.. பாலம் பகுதியில் அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதையொ ட்டி, தற்போது உள்ள பாலத்தை ஒட்டியே 333 மீட்டர் நீளம், 11 மீட்டர் அகலம் கொண்ட 3 வழிப்பாதையுடன் ரூ13 கோடியில் புதிய பாலம் கட்டப்பட உள்ளது. இந்த புதிய பாலத்தின் பணிகளை 15 மாதங்களில் முடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இதுதவிர சென்னையில் திருமங்கலம், அண்ணா நகர், முகப்பேர் பகுதிகளை இணைக்கும் சந்திப்பில் ரூ47 கோடியில் புதிய பாலம் அமைக்க இன்னும் 10 நாட்களில் அடிக்கல் நாட்டப்படும். அதேபோல், அண்ணா சாலையில் புதிய தலைமைச் செயலகம் & பட்டுல்லா சாலை இடையே ரூ1.8 கி.மீ., நீளத்துக்கு ரூ161 கோடியில் 4 வழிப் பாதையுடன் கூடிய மேம்பாலமும், அண்ணா அறிவாலயம் அருகில் இருந்து சைதாப்பேட்டை, மாம்பலம் கால்வாய் வரை 2.9 கி.மீ., நீளத்துக்கு நான்கு வழிப்பாதையுடன் கூடிய மேம்பாலம் ரூ339 கோடி செலவிலும் கட்டப்பட உள்ளது. அண்ணா சாலையில் அமைக்கப்படும் 2 பாலத்துக்கான தூண்கள் அமைக்கும் பணி, 2011 மார்ச் மாதத்துக்குள் முடிக்க கால நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன் பேசினார். ரூ8 கோடியில் பழைய பாலங்கள் சீரமைப்பு

விழாவில் மேயர் மா.சுப்பிரமணியன் பேசுகையில், "சென்னையில் வைத்தியநாதன் பாலம், கிண்டி பாலம், ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை, கோடம்பாக்கம் மேம்பாலம், சென்ட்ரல் ரயில் நிலையம் எதிரே உள்ள ஸ்டான்லி பாலம் ஆகியவற்றை ரூ8 கோடியே 39 லட்சம் செலவில் வலுப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது" என்றார்.

அடையாறு திருவிக பாலம் அருகே ரூ13 கோடியில் கட்டப்பட உள்ள உயர் மட்ட பாலப்பணிக்கு நேற்று அடிக்கல் நாட்டப்பட்டது. இந்த விழாவில் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன், மேயர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.