தினகரன் 07.01.2011
கரூர் நகராட்சி அலுவலகத்திற்கு புதிய கட்டடம் கட்டும் பணி தீவிரம்
கரூர், ஜன.7:
கரூர் நகராட்சி மிகவும் பழமை வாய்ந்த நகராட்சி யாக செயல்படுகிறது. தற்போது பழமையான கட்டடத்தில் கூட்ட அரங்க மான பெத்தாட்சி ஹால், நகர்மன்ற தலைவர் அறை, ஆணையர் அறை, மேலா ளர் அறை, கணினி அறை, வரி வசூலிப்பு அறை, சுகாதாரத்துறை மற்றும் துறை அலுவலகங்கள் செயல்படுகின்றன.
கூட்டம் நடை பெறும் அரங்கமான பெத் தாட்சி ஹால் கடந்த 1927ம் ஆண்டு கட்டப்பட்டது. 83 வருட பாரம்பரிய பழமை வாய்ந்த இந்த கூட்ட அரங்கில்தான் தற்போதும் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
83வருட பாரம்பரியம் மிக்க கரூர் நகராட்சிக்கு புதிய அலுவலக கட்டடம் நிர்வாக வசதிக்காகவும், பொதுமக்களின் வசதிக்காகவும் கட்ட வேண்டும் எ ன்ற கோரிக்கை இருந்து வந் தது. அக்கோரிக்கை நிறை வேறும் விதமாக தற்போது அனைத்து அலுவலகங்களையும் ஒருங்கிணைத்து கூட்ட மன்றத்துடன் கூடிய புதிய கட்டடம் கரூர் நகராட்சிக்கு கட்டப்படுகிறது. நகராட்சி அலுவலகத்தின் பின்புறம் உள்ள காலியிடத்தில் இந்த புதிய நகராட்சி அலுவலக கட்டடம் ரூ.1.45 கோடியில் கட்டப்படுகிறது. இரண்டு தளங்களுடன் கூடிய இந்த புதிய அலுவலக கட்டடம் கட்டும் பணி தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இன்னும் சில மாதங்களில் கட்டடப்பணிகள் நிறைவுபெறும் என அலுவலர்கள் தெரிவித்தனர்.