Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

நன்றே செய்வீர்; இன்றே செய்வீர்

Print PDF

தினகரன்            04.08.2012

நன்றே செய்வீர்; இன்றே செய்வீர்

சென்னை மாநகராட்சி எல்லை 3 மடங்கு அதிகரித்து விட்டது. ஏற்கனவே வளர்ந்த பகுதிகளை பார்த்து சமீப காலம் வரை புறநகராக இருந்த புதிய மாநகராட்சி பகுதிகள் ஏங்கித் தவித்தன. அவற்றின் ஏக்கத்தை போக்கும் வகையில் சென்னை மாநகராட்சியின் கட்டமைப்பு வசதிகளுக்கு தமிழக அரசு ரூ350 கோடி ஒதுக்கியுள்ளது.

அதில் அந்தந்த மண்டலங்களுக்கு உரிய பங்குகள் அங்கு செய்யப்பட வேண்டிய பணிகளை கணக்கிட்டு பிரித்தாகி விட்டது. சாலை வசதி, கரூவுநீர் அகற்றுதல், குடிநீர் ஆகிய பணிகளுக்கான ஒப்பந்தங்கள் கோரப்பட்டு ஒருவரூயாக அவற்றை திறக்கும் நேரம் வந்துள்ளது.

அடுத்த ஒரு மாதத்துக்குள் பணிகள் தொடங்கி மழைக் காலம் ஆரம்பமாவதற்குள் முடிக்கப்படும் என்று மாநகராட்சி அறிவித்துள்ளது. அப்படியே புறநகர் பகுதிகளில் சிமென்ட் சாலைகள், பிளாஸ்டிக் மற்றும் தார் சாலைகள் போடப்பட்டு, சென்னை குடிநீர் வசதி, பாதாள சாக்கடை வசதிகள் வந்து விட்டால்தான் சென்னை விரிவடைந்தது உண்மையானதாக இருக்கும்.

அந்த நிலை வரும்போது அதை ஒட்டிய பகுதிகள் புதிய புறநகர் பகுதிகளாக அந்தஸ்து பெற்று விடும்.ஏற்கனவே, சென்னை மாநகராட்சி எல்லைக்குள் சேர்க்கப்பட்ட பகுதிகளில் வீட்டு மனைகளின் விலை கோடிகளை நெருங்கி விட்டதால், ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் மேலும் 50 கி.மீ. தூர பகுதிகளை நோக்கி படையெடுத்தன. இப்போது புறநகரை தாண்டி மனை பிரிவுகள் பரபரப்பாக விற்பனையாகி வருகின்றன. நடுத்தர மக்களுடைய பட்ஜெட்டுக்கு ஏற்றவையாகவும் அவை உள்ளதால் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

அரசுக்கு சொந்தமான சிப்காட் மற்றும் சிட்கோ ஆகியவை புறநகர் பகுதிகளில் தொரூற்பேட்டைகளையும், தகவல் தொரூல்நுட்ப பூங்காக்களையும் அமைத்து வருகின்றன. இதனால் இத்தகைய பகுதிகளில் வீட்டு மனைகளை வாங்கிப் போட்டால் எதிர் காலத்தில் நல்ல விலை கிடைக்கும் என்ற எண்ணம் பொதுமக்களிடையே எழுந்துள்ளது.  இதுபோன்ற இடங்களில் சில லட்சங்களை இன்று முதலீடு செய்தால் அடுத்த 10 ஆண்டுகளில் கணிசமான லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. அதனால், நல்ல முடிவை தள்ளிப் போடாமல் இன்றே எடுப்பது நல்லது.