Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

புதிய பாலம் திறப்பு

Print PDF

தினமலர்                      06.08.2012

புதிய பாலம் திறப்பு

பட்டுக்கோட்டை: பட்டுக்கோட்டை நகராட்சியில் புதிதாக கட்டப்பட்ட பாலத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்காக நகராட்சி தலைவர் ஜவகர்பாபு திறந்து வைத்தார்.பட்டுக்கோட்டை நகராட்சியில், புதிய பேருந்து நிலையம் மற்றும் 29வது வார்டு சீனிவாசன் 4வது சந்து பகுதியில் புதிதாக பாலம் மற்றும் கான்கிரீட் ரோடு அமைக்கப்பட்டுள்ளது.

இப்பணிகள் நகராட்சி பொது நிதியிலிருந்து, 10 லட்ச ரூபாய் மதிப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதை நகராட்சி தலைவர் ஜவகர்பாபு பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைத்தார்.இதில், நகராட்சி துணைத்தலைவர் பாரதிதாசன், கவுன்சிலர்கள் செல்ல நாகராஜன், மோகன், பிரபு, மயில்வாகனன், மாஸ்கோ, ரவிச்சந்திரன், வெள்ளைச்சாமி மற்றும் இளநிலை பொறியாளர் ரவிச்சந்திரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.