தினகரன் 06.08.2012
மேட்டுப்பாளையம் நகராட்சிக்கு ரூ1 கோடியில் புதிய கட்டிடம்
மேட்டுப்பாளையம்,: மேட்டுப்பாளையம் நகராட்சி அலுவலகத்துக்கு காரமடை ரோட்டில் உள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்பு வளாகத்தில் ரூ.1 கோடியில் புதிய கட்டிடம் கட்டப்படுகிறது. அதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் கருணாகரன் தலைமை வகித்தார். அடிக்கல் நாட்டியும் நலத்திட்ட உதவிகள் வழங்கியும் அமைச்சர் தாமோதரன் பேசினார். நிகழ்ச்சியில், எம்.எல்.ஏ. சின்னராஜ், நகர்மன்ற தலைவர் சதீஸ்குமார், துணைத்தலைவர் ரமாசெல்வி, நகராட்சி கவுன்சிலர்கள் மற்றும் மாவட்ட மாணவரணி செயலாளர் நாசர், மைதானம் சந்தானம், வான்மதிசேட் உட்பட பலர்கலந்து கொண்டனர்.