Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ரூ.55 லட்சம் கட்டட பணிகள் மேயர் திறந்துவைத்தார்

Print PDF

தினகரன்   08.08.2012

ரூ.55 லட்சம் கட்டட பணிகள் மேயர் திறந்துவைத்தார்

கோவை, : கோவையில் ரூ.55 லட்சம் மதிப்புள்ள புதிய கட்டட பணிகளை மேயர் செ.ம.வேலுசாமி திறந்துவைத்தார். கோவை மாநகராட்சி 25வது வார்டு தேவாங்கபேட்டை வீதியில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் ரூ.20 லட்சத்தில் 6 கடைகள் கட்டப்பட்டுள்ளன. இதே வார்டில் புரூக்பாண்ட் ரோடு சீதாலட்சுமி மகப்பேறு மருத்துவமனை வளாகத்தில் சுகாதார ஊழியர்களுக்கு ரூ.20 லட்சத்தில் 3 வீடுகள் கட்டப்பட்டுள்ளன. 80வது வார்டு ராஜவீதியில் ரூ.15 லட்சத்தில் மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனைக்கு புதிய கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இவை, கோவை வடக்கு சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதி மற்றும் மாநகராட்சி நிதியில் இருந்து கட்டப்பட்டுள்ளது.

இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. வடக்கு சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ மலரவன் தலைமை தாங்கினார். கமிஷனர் பொன்னுசாமி முன்னிலை வகித்தார். மேயர் செ.ம.வேலுசாமி புதிய கட்டடங்களை திறந்துவைத்தார்.

விழாவில், துணை கமிகஷனர் சிவராசு, மத்திய மண்டல தலைவர் ஆதிநாராயணன், பணிக்குழு தலைவர் அம்மன் அர்ஜூனன், 25வது வார்டு கவுன்சிலர் ஜெயபால் உள்பட பலர் பங்கேற்றனர்.