Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

குப்பை அள்ளும் பணிக்கு ரூ.11 லட்சத்தில் வாகனம்

Print PDF

தினமலர்                    15.08.2012

குப்பை அள்ளும் பணிக்கு ரூ.11 லட்சத்தில் வாகனம்

வேதாரண்யம்: ஒருங்கிணைந்த நகர்ப்புற வளர்ச்சி திட்டத்தில் வேதாரண்யம் நகராட்சிக்கு திடக்கழிவு மேலாண்மைக்கு குப்பை அள்ளும் வாகனத்தை 11 லட்சம் ரூபாய் மதிப்பில் தமிழக அரசு வழங்கியுள்ளது. இதனை நகராட்சிக்கு அர்ப்பணிக்கும் விழா நகராட்சி தலைவர் மலர்க்கொடி தலைமையில் நடந்தது.இதில், வரித்தண்டலர் குகன் வரவேற்றார்.துணைத்தலைவர் சுரேஷ்பாபு, ஆணையர் சுந்தரேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேதை எம்.எல்.ஏ., காமராஜ், குப்பை அள்ளும் வாகன பணியை துவக்கி வைத்தார். கவுன்சிலர் ராஜகிளி, மீராஷேக் மொய்தீன், கார்த்திகேயன், சந்திராகுமார், சுப்பிரமணியன், லட்சுமி, சிவசண்முகம், நஜிமுதீன் உள்பட பலர் பங்கேற்றனர். துப்புரவு ஆய்வாளர் தங்க ராமு நன்றி கூறினார்.

Last Updated on Thursday, 16 August 2012 06:08