Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

திருவண்ணாமலை நகராட்சிக்கு ரூ.57 லட்சத்தில் 3 குப்பை லாரிகள்

Print PDF
தினமணி                     30.08.2012

திருவண்ணாமலை நகராட்சிக்கு ரூ.57 லட்சத்தில் 3 குப்பை லாரிகள்

திருவண்ணாமலை, ஆக. 29: திருவண்ணாமலை நகராட்சிக்கு ரூ.57 லட்சத்தில் வாங்கப்பட்டுள்ள அதிநவீன குப்பை லாரிகளின் இயக்கத்தை புதன்கிழமை நகர்மன்றத் தலைவர் என்.பாலச்சந்தர் தொடங்கி வைத்தார்.

திருவண்ணாமலை நகராட்சி ஒருங்கிணைந்த நகர்ப்புற வளர்ச்சிக் குழுமம் 2011-2012 திட்டத்தின் கீழ், திடக்கழிவு மேலாண்மைத் திட்டப் பணிகளில் ஈடுபடுத்த இந்த லாரிகள் அண்மையில் வாங்கப்பட்டன.

ரூ.57 லட்சம் மதிப்புள்ள 3 அதிநவீன காம்பேக்டர் லாரிகளை இயக்கி வைக்கும் விழா புதன்கிழமை மாலை நடைபெற்றது.

நகராட்சி அலுவலகம் எதிரே நடைபெற்ற இவ் விழாவில், நகர்மன்றத் தலைவர் என்.பாலச்சந்தர் இந்த லாரிகளை கொடியசைத்து இயக்கி வைத்தார். இந் நிகழ்ச்சியில், நகராட்சி ஆணையர் பெ.விஜயலட்சுமி, 6-வது வார்டு கவுன்சிலர் ஜெ.எஸ்.செல்வம் மற்றும் நகராட்சி அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.
Last Updated on Thursday, 30 August 2012 11:22