Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ஆரணி நகராட்சியில் 6 இடங்களில் உயர்கோபுர விளக்குகள்

Print PDF
தினமணி           04.09.2012

ஆரணி நகராட்சியில் 6 இடங்களில் உயர்கோபுர விளக்குகள்


ஆரணி, செப். 3: ஆரணி நகராட்சியில் 6 இடங்களில் ரூ.33 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட உயர்கோபுர மின்விளக்குகள் திங்கள்கிழமை தொடங்கி வைக்கப்பட்டன.

ஆரணி நகராட்சியில் ஒருங்கிணைந்த நகர்ப்புற வளர்ச்சிக்குழுமத் திட்டத்தின் கீழ் காமராஜர் சிலை, அருணகிரிசத்திரம், எம்ஜிஆர் பஸ்நிலையம், சைதாப்பேட்டை, சூரியகுளம் அருகில், அரசு மருத்துவமனை அருகில் என மொத்தம் 6 இடங்களில் ரூ.33 லட்சம் மதிப்பில் உயர்கோபுர மின்விளக்குகள் அமைக்கப்பட்டன.

இவற்றை நகர்மன்றத் தலைவர் ஆனந்தகுமாரி கருணாகரன் தொடங்கி வைத்தார்.நகராட்சி ஆணையர் (பொறுப்பு) செல்வம், நகர்மன்றத் துணைத் தலைவர் தேவசேனா ஆனந்த் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.