Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

திருவொற்றியூரில் கழிவு நீரை அகற்ற கூடுதல் லாரிகள்

Print PDF
தின மணி              26.02.2013

திருவொற்றியூரில் கழிவு நீரை அகற்ற கூடுதல் லாரிகள்

திருவொற்றியூரில் கழிவு நீரை அகற்றுவதற்கு கூடுதலாக 2 லாரிகளை சென்னைக் குடிநீர் மற்றும் கழிவு நீர் அகற்றல் வாரியம் ஈடுபடுத்தியுள்ளது.

திருவொற்றியூரில் கழிவு நீரை அகற்ற கட்டணம் செலுத்தியும் 20 நாள்களாகக் காத்திருக்கும் அவலம் என்ற செய்தி தினமணியில் கடந்த பிப்.18 அன்று வெளியானது.

இதனையடுத்து சென்னைக் குடிநீர் வாரிய உயர் அதிகாரிகள் உத்தரவின் பேரில் திருவொற்றியூர் பகுதிப் பொறியாளர் முத்துச்சாமி தலைமையில் சிறப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.  இந்நிலையில் கழிவு நீர் அகற்றும் இரண்டு தனியார் லாரிகளை ஒப்பந்த அடிப்படையில் உடனடியாக வாரியம் ஈடுபடுத்தியது. மேலும் ஏற்கெனவே வாரியத்தின் வசம் இருக்கும் பழுதடைந்த லாரிகளின் பழுதை நீக்கும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆனால் பாதாளச் சாக்கடை வசதி முழுமையாக ஏற்படுத்தப்படும்வரை திருவொற்றியூர் மண்டலத்திற்கு 6 லாரிகள் நிச்சயம் வேண்டும்.

அப்போதுதான் தடையின்றி கழிவு நீரை அகற்ற முடியும் என கீழ்நிலை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
Last Updated on Tuesday, 26 February 2013 11:51